தமிழக அரசின் கரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் அஜித்.
கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க முதல்வரின் நிவாரண நிதிக்கு தராளமாக உதவ வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தாா். அதன் அடிப்படையில் திரைத்துறையினர் பலரும் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக அரசின் கரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் அஜித். வங்கி பரிவர்த்தனை மூலமாக கரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் நிதி அனுப்பியுள்ளார்.
முன்னதாக வெளியிட்ட அரசு செய்திக்குறிப்பில், ரூ. 2.5 கோடி நன்கொடை என்றிருந்த தகவல், பின்னர் ரூ. 2.5 லட்சம் எனத் திருத்தி வெளியிடப்பட்டுள்ளது.