செய்திகள்

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் ரஜினி

DIN

நடிகர் ரஜினிகாந்த், கரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார்.

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

சன் பிக்சா்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலா் நடிப்பில் உருவாகி வருகிறது.

கரோனா பரவல், ரஜினியின் உடல்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது. ரஜினியின் உடல்நிலை சீரானவுடன் சென்னையிலும் பிறகு ஹைதராபாத்திலும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்பட்டது.

படப்பிடிப்பை முடித்துக்கொண்டு நேற்று சென்னை திரும்பினார் ரஜினி. இதையடுத்து கரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார். இத்தகவலை அவருடைய மகள் செளந்தர்யா, ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT