பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக தனது சுட்டுரை பதிவில் தெரிவித்துள்ளார்.
38 வயதான நடிகர் அல்லு அர்ஜுன் கடந்த 28-ம் தேதி கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்துதலில் இருந்தார்.
இதுதொடர்பாக அவர் தனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்காக சுட்டுரை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கரோனா நோய்த் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும், அதோடு, ரசிகர்களின் பிரார்த்தனை மற்றும் ஆசீர்வாதங்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
வீட்டில் இருங்கள் மற்றும் பாதுகாப்பாக இருங்கள். எல்லார் அன்பிற்கும் நன்றி என்று கூறியுள்ளார்.