செய்திகள்

கரோனா நிவாரண நிதி: ரூ. 30 கோடி வழங்கிய சன் டிவி

DIN

கரோனா நிவாரண நிதிக்காக ரூ. 30 கோடியை வழங்கியுள்ளது சன் டிவி நிறுவனம்.

கரோனா நிவாரண நிதிக்காக சினிமா, கிரிக்கெட் பிரபலங்களும் முன்னணி நிறுவனங்களும் நன்கொடை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் கரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ. 30 கோடி அளித்துள்ளது சன் டிவி நிறுவனம்.

இந்தத் தொகை, மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பல்வேறு கரோனா தடுப்புத் திட்டங்களுக்கும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகளை வழங்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என்று இதுதொடர்பான அறிக்கையில் சன் டிவி தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் உள்ள தனது லட்சக்கணக்கான நேயர்களிடம் கரோனா விழிப்புணர்வை உண்டாக்கும் நடவடிக்கைகளிலும் சன் டிவி ஈடுபடும் என்றும் கூறியுள்ளது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பஅலை வீசும்!

பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

ரிஷப் பந்த் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து!

SCROLL FOR NEXT