செய்திகள்

ஒருதலை ராகம் பட தயாரிப்பாளர் இப்ராஹிம் காலமானார்

DIN

டி. ராஜேந்தர் இயக்குநராக அறிமுகமாகிய ஒருதலை ராகம் படத்தின் தயாரிப்பாளர் ஈ.எம். இப்ராஹிம் இன்று காலமானார்.

1980-ல் வெளியான படம் ஒருதலை ராகம். டி.ஆரின் முதல் படமான இப்படத்தைத் தயாரித்தார் ஈ.எம். இப்ராஹிம். மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வடகரையைச் சேர்ந்தவர்.

தயாரிப்பாளருக்கும் டி.ஆருக்கும் இடையிலான மோதலால் படத்தின் டைட்டில் கார்டில் இயக்கம் - இப்ராஹிம் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. இளம் கலைஞர்கள், புதுமுகங்களைக் கொண்டு உருவான ஒருதலை ராகம் படம் தமிழ்த் திரையுலகில் புரட்சியை ஏற்படுத்தியது. திரையரங்குகளில் ஒரு வருடம் ஓடியது.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் தயாரிப்பாளர் ஈ.எம். இப்ராஹிம் இன்று காலமானார். 

அவருடைய மறைவுக்கு டி. ராஜேந்தர் இரங்கல் தெரிவித்துக் கூறியதாவது:

1980ல் வெளியான எனது முதல் படமான ‘ஒருதலை ராகம்’ படத்தின் தயாரிப்பாளர் .இப்ராஹிம் மறைந்துவிட்டார் என்ற செய்தி என் இதயத்தில் ஈட்டியாகப் பாய்கிறது. அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT