பாடகி ஷ்ரேயா கோஷல், கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டுள்ளார்.
2002-ல் முதல் படத்திலேயே சிறந்த பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றவர் ஷ்ரேயா கோஷல். இதுவரை நான்கு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். பிப்ரவரி 5, 2015-ல் தொழிலதிபர் ஷிலாதித்யாவைக் காதல் திருமணம் செய்தார் ஷ்ரேயா கோஷல். இருவரும் 10 வருடங்கள் காதலித்து திருமணம் செய்தார்கள். கடந்த மே 22 அன்று ஷ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தேவ்யான் எனக் குழந்தைக்குப் பெயரிட்டுள்ளார்கள்.
இந்நிலையில் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டுள்ளார் ஷ்ரேயா கோஷல். இதுதொடர்பாக விடியோ வெளியிட்டு, இன்ஸ்டகிராமில் எழுதியதாவது:
வீட்டில் தேவ்யான் அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தபோது உடனடியாக வெளியே வந்து கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டேன். மருத்துவர்களின் பரிந்துரைப்படி புதிய தாய்மார்களுக்கு கரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்றார்.