பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ரம்யா பாண்டியன், சூர்யா தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
2016-ல் வெளியான ஜோக்கர் படத்தில் நடித்து கவனம் பெற்றவர் ரம்யா பாண்டியன். இதன்பிறகு இவர் நடிப்பில் 2018-ல் ஆண் தேவதை படம் வெளியானது.
சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இறுதி வாரம் வரைக்கும் பங்கேற்றார்.
இந்நிலையில் நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார் ரம்யா பாண்டியன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்குகிறார்.