செய்திகள்

பாஃப்டா முயற்சிக்குக் கிடைக்கும் வரவேற்பு: ஏ.ஆர். ரஹ்மான் மகிழ்ச்சி

DIN

பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் என்கிற பாஃப்டா அமைப்பு, திரைப்பட விருதுகளை வருடந்தோறும் வழங்கி திரைப்படக் கலைஞர்களை ஊக்குவித்து வருகிறது. 

இந்தியாவில் உள்ள கலைஞர்களின் திறமைக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது பாஃப்டா அமைப்பு. இதற்காக, பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை அதன் தூதராக நியமித்துள்ளது.

திரைப்படம், தொலைக்காட்சி, விளையாட்டு போன்றவற்றில் உள்ள அபாரமான திறமைகளைக் கண்டறிவதற்காக பாஃப்டாவுடன் இணைந்து பணிபுரிவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதன்மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாஃப்டா அமைப்பின் ஆதரவு, வளரும் கலைஞர்களுக்குக் கிடைக்கும். பாப்டாவின் திட்டத்தில் தேர்வாகும் இந்தியத் திறமையாளர்களுக்கு இதர கலைஞர்களுடன் தொடர்பு கிடைப்பதோடு, பாஃப்டா விருது வென்ற கலைஞர்களின் ஊக்கமும் கிடைக்கும். இந்தியாவின் மிகச்சிறந்த திறமைகள் உலகளவில் அறியப்படுவதைக் காண ஆவலாக உள்ளேன் என்று புதிய பொறுப்பு பற்றி கூறினார் ரஹ்மான்.

இதன் முதற்கட்டமாக பாஃப்டா அமைப்பு, இந்தியாவின் ஐந்து திறமைகளைக் கண்டறிந்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவி செய்யும். பாஃப்டா பிரேக்த்ரூ என்கிற இத்திட்டம் இங்கிலாந்தில் 2013 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2018-ல் சீனாவில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய பாஃப்டா அமைப்பு, தற்போது இந்தியக் கலைஞர்களை ஊக்குவிக்கும் திட்டத்தை ஏ.ஆர். ரஹ்மானின் உதவியுடன் அமல்படுத்தவுள்ளது. 

இதில் கலந்துகொள்வதற்கான விண்ணப்பங்களை அளிக்க ஜனவரி 21 வரை காலக்கெடு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காலக்கெடு ஜனவரி 25 முதல் பிப்ரவரி 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பாஃப்டா அறிவித்துள்ளது. 

இதுபற்றி ரஹ்மான் கூறியதாவது:

பாஃப்டாவின் இந்த முயற்சிக்கு நாடு முழுவதிலும் இருந்து கிடைக்கும் வரவேற்பைக் கண்டு பெருமிதம் அடைகிறேன். இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் திறமையாளர்கள் உள்ளார்கள் என்கிற வகையில் நாடு முழுவதிலும் இருந்து விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. பிப்ரவரி 8 வரை காலக்கெடுவை பாஃப்டா நீட்டித்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT