செய்திகள்

கோல்டன் குளோப் விருதுக்கு அனுப்பப்படும் சூர்யாவின் 'ஜெய் பீம்'

DIN

நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய் பீம் திரைப்படம் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் ஜெய் பீம் படத்தைப் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது. ஞானவேல் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் உலக அளவில் திரைப்படங்களை மதிப்பிடும் ஐஎம்டிபி தளத்தில் முதல் இடத்தைப் பிடித்தது.  

இந்த நிலையில், உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கு ஜெய் பீம் திரைப்படம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா வெளியிடும் கூழாங்கல் திரைப்படமும் கோல்டன் குளோப் விருதுக்காக அனுப்பப்ட்டுள்ளது. இந்த இரண்டு படங்களில் எந்தப் படம தேர்ந்தெடுக்கப்படும் என்பது குறித்து விரைவில் தெரியவரும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வருக்கு மாா்க்சிஸ்ட் வேட்பாளா்கள் நன்றி

ஆதினத்துக்கு மிரட்டல்: கல்வி நிறுவன நிா்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை முன் ஜாமீன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்: அண்ணாமலை

டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவா் டி.லட்சுமி நாராயணன் காலமானாா்

SCROLL FOR NEXT