செய்திகள்

நடிகர் அர்ஜுன் மீதான பாலியல் தொல்லை புகார் ஆதாரமற்றது : காவல் துறையினர் தகவல்

DIN

'நிபுணன்' என்ற படத்தில் நடித்தபோது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கடந்த 2018 ஆம் ஆண்டு  மீ2 இயக்கம் மூலம் புகார் தெரிவித்தார். 

இந்தப் புகாரை மறுத்த நடிகர் அர்ஜுன் ரூ.5 கோடி கேட்டு நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். மேலும் நடிகை ஸ்ருதி ஹரிஹரனும் நடிகர் அர்ஜுன் மீது காவல்துறையில் புகார் அளித்தார். 4 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில் இந்த வழக்கில் நடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகாரானது எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாதது என பெங்களூரு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் நீதிமன்றத்தில் நடிகர் அர்ஜுன் மீது தவறில்லை என அறிக்கை சமர்பிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

SCROLL FOR NEXT