செய்திகள்

மாறுவேடம் பூண்டு வந்த என் குருக்களில் ஒருவர்: நாகேஷுக்கு கமல் புகழஞ்சலி

DIN

சென்னை: மாறுவேடம் பூண்டு வந்த என் குருக்களில் ஒருவர் என்று மறைந்த நடிகர் நாகேஷுக்கு மநீம தலைவர் கமல் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

மறைந்த நடிகர் நாகேஷுக்கு இன்று பிறந்தநாள். அதையொட்டி பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் மாறுவேடம் பூண்டு வந்த என் குருக்களில் ஒருவர் என்று மறைந்த நடிகர் நாகேஷுக்கு மநீம தலைவர் கமல் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

நாகேஷ் அய்யா... உம்மை நினைக்காத நாட்கள் மிகச்சிலவே. பல தலைமுறைகளை மகிழ்வித்த வித்தகர். அந்த ரசிகர் கூட்டத்தில்  நானும் உட்படுவேன். நண்பனாய் மாறுவேடம் பூண்டு வந்த என் குருக்களில் அவரும் ஒருவர். என் கலை மரபணுவில் அவரும் வாழ்கிறார்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.75 லட்சம் பறிமுதல்

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT