சென்னை: மாறுவேடம் பூண்டு வந்த என் குருக்களில் ஒருவர் என்று மறைந்த நடிகர் நாகேஷுக்கு மநீம தலைவர் கமல் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
மறைந்த நடிகர் நாகேஷுக்கு இன்று பிறந்தநாள். அதையொட்டி பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் மாறுவேடம் பூண்டு வந்த என் குருக்களில் ஒருவர் என்று மறைந்த நடிகர் நாகேஷுக்கு மநீம தலைவர் கமல் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
நாகேஷ் அய்யா... உம்மை நினைக்காத நாட்கள் மிகச்சிலவே. பல தலைமுறைகளை மகிழ்வித்த வித்தகர். அந்த ரசிகர் கூட்டத்தில் நானும் உட்படுவேன். நண்பனாய் மாறுவேடம் பூண்டு வந்த என் குருக்களில் அவரும் ஒருவர். என் கலை மரபணுவில் அவரும் வாழ்கிறார்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.