சென்னை: விரைவில் தனது பெயரில் யூட்யூப் சேனல் துவங்கவுள்ளதாக பிரபல தமிழ் நடிகர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
தமிழின் இளம் கதாநாயகர்களில் ஒருவரான சிலம்பரசன் தனது சமூக வலைதள ஈடுபாடு குறித்து செவ்வாயன்று புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவரது தரப்பில் இருந்து வெளியாகியுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நடிகர் சிலம்பரசன் விரைவில் தன்னுடைய பெயரில் யூட்யூப் சேனல் தொடங்கவுள்ளார்.
அதேசமயம் ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் புதிய கணக்குகளைத் தொடங்க சிம்பு திட்டமிட்டுள்ளார்.
இதுதொடர்பான முதற்கட்ட அறிவிப்பினை வரும் 22-ஆம் தேதியன்று நடிகர் சிம்பு வெளியிடுகிறார்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.