செய்திகள்

கொடைக்கானலில் முகக்கவசம் அணியாமல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த நடிகை

DIN

கொடைக்கானல்: கொடைக்கானலில் முகக்கவசம் அணியாமல் அதிகாரிகளுடன் நடிகை  ஒருவர் வாக்குவாதம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

கரோனா ஊரடங்குத் தளர்வுகள் அறிவிகபட்டதைத் தொடர்ந்து கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரம் சுற்றுலா பயணிகள் பலரும் முகக்கவசம் அணியாமல் இருப்பதாக அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சுற்றுலா பயணிகள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கொடைக்கானலில் முகக்கவசம் அணியாமல் அதிகாரிகளுடன் நடிகை  ஒருவர் வாக்குவாதம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

கொடைக்கானல் ஏரிச்சாலை வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் இருந்த இருவர் முகக்கவசம் அணியாமல் இருந்தனர். அதிகாரிகளின் விசாரணையில் அவர்களில் ஒருவர் பிரபல நடிகை அதிதி பாலன் என்பது தெரியவந்தது. இவர் தமிழில் ‘அருவி’ என்ற படத்தில் நடித்து பிரபலமானவர்.

இதையடுத்து அதிதி பாலன் உள்ளிட்ட இருவருக்கும் அதிகாரிகள் தலா ரூ.200 அபராதம் விதித்தனர். ஆனால் இதை ஏற்க மறுத்த நடிகை அதிதி பாலனும், அவருடன் வந்தவரும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

சட்ட விதிப்படி தான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் உறுதியாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து இருவரும் தலா ரூ.200 அபராதம் செலுத்தி விட்டுச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT