செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பாடகி சுசித்ரா: இன்ஸ்டகிராமில் வெளிப்படுத்திய கருத்து

DIN

பிக் பாஸ் நிகழ்ச்சியில் குறைந்த வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில் [பாடகி சுசித்ரா வெளியேற்றப்பட்டுள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

ரம்யா பாண்டியன், ஆஜித், ஆரி, அனிதா சம்பத், வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம், ஷிவானி, சனம் ஷெட்டி, பாலா, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ரேகா, ரியோ, சம்யுக்தா என 16 பேர் பிக் பாஸ் இல்லத்துக்குள் முதலில் நுழைந்தார்கள். பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா மற்றும் பிரபல பாடகி மற்றும் ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா ஆகியோர் வைல்ட் கார்ட் வழியாக புதிய போட்டியாளர்களாக நுழைந்தார்கள். 

இந்த வருட பிக் பாஸ் போட்டியில் முதலில் வெளியேறியவர் மூத்த நடிகை ரேகா. பாடகர் வேல்முருகன் 2-வது போட்டியாளராகவும் அடுத்ததாக நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தியும் வெளியேறினார்கள்.

ஆரி, அனிதா, பாலா, ரியோ, சம்யுக்தா, சோம், சுசித்ரா என ஏழு பேர் கடந்த வாரம் வெளியேற வாய்ப்புள்ளவர்களின் பட்டியலில் இடம்பெற்றார்கள். இவர்களில் குறைந்த வாக்குகளைப் பெற்ற பாடகி சுசித்ரா போட்டியிலிருந்து நேற்று வெளியேறினார். 

இதையடுத்து இன்ஸ்டகிராமில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது பற்றி சுசித்ரா கூறியதாவது:

ஒருவேளை என்னைப் பற்றி ஏற்கெனவே திரித்துக் கூறப்பட்டதை ஆழ்மனதில் நான் நம்பியிருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் குறும்படங்களினால் என்னைப் பற்றி மாற்றிக் காண்பிக்கப்பட்டதாலும்... பார்ப்பதற்கு நான் எப்படி இருப்பேன் என்பதை மீண்டும் எனக்கு நினைவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன் என்று கூறி தன்னுடைய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT