ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் ஸோயா அக்தர் இயக்கிய படம் - கல்லி பாய். இந்த வருடம் பிப்ரவரி 14 அன்று வெளியானது.
ரூ. 230 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இந்தப் படம் அடுத்த மாதம் ஜப்பானில் வெளியாகவுள்ளது.
நான் இதுவரை ஜப்பானுக்குச் சென்றதில்லை. ஆனால் ஜப்பான் குறித்து நிறைய நல்ல விஷயங்களை அறிந்துள்ளேன். அங்கு நிச்சயம் வருவேன் என நம்புகிறேன், கல்லி பாய் ஜப்பானில் வெளியாவது படக்குழுவினர் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம் என கல்லி பாய் படத்தின் ஜப்பான் வெளியீடு குறித்து கதாநாயகன் ரன்வீர் சிங் கூறியுள்ளார்.