இந்த வாரம் விஜய் சேதுபதி நடித்துள்ள சிந்துபாத் உள்ளிட்ட ஆறு படங்கள் வெளியாவதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
ஒரே சமயத்தில் ஆறு படங்கள் வெளியாவது நல்லதல்ல. கொலைகாரன் படத்துக்கு தொடக்கத்தில் நல்ல வசூல் கிடைத்ததற்குக் காரணம், தனியாக 370 திரையரங்குகளில் வெளியானதுதான். இதுபோன்ற போட்டிகள் தவிர்க்கப்படவேண்டும். நிறைய படங்கள் ஒரே சமயத்தில் வெளியானால் உங்கள் படம் வெளியாவதைத் தவிர்த்துவிடுங்கள். ஓரிரு படங்கள் வெளிவரும்போது உங்கள் படத்தை வெளியிடுங்கள் என்று கூறியுள்ளார்.