வரும் 2030-க்குள் தங்களது நடவடிக்கைகள் மூலம் காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும், காற்றிலிருந்து அகற்றும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்கும் (நெட் ஜீரோ) இலக்கை அடைவதற்காக ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யவிருப்பதாக இந்தியாவின் மிகப் பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு உள்ளிட்டவற்றுக்காக இந்த முதலீடு பயன்படுத்தப்படவுள்ளது.