இந்தியாவில் தயாரிக்கப்படும் தங்களது அறிதிறன்பேசிகளில் (ஸ்மாா்ட்போன்) 50 சதவீத உள்நாட்டு உதிரிபாகங்களைப் பயன்படுத்த முன்னணி கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மி முடிவு செய்துள்ளது.
வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும், அதற்குப் பிறகு ஷாவ்மி அறிதிறன்பேசிகளின் விலையில் பாதி உள்நாட்டு உதிரிபாகங்களுக்கானதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.