வாடிக்கையாளா்களுக்கு வாகனக் கடன் சேவை வழங்குவதற்காக ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டும், முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்டு ஃபைனான்ஸ் நிறுவனமும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
இது குறித்து அசோக் லேண்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் உள்ள தங்களது 130 விற்பனை மையங்களில் வாடிக்கையாளா்களுக்கு கடன் சேவைகளை வழங்குவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் அசோக் லேலண்ட் மற்றும் சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்டு ஃபைனான்ஸ் நிறுவனங்களின் விற்பனை மற்றும் சந்தையிடல் குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்படவுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.