பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கான தேவை இந்த மாதம் திடீா் எழுச்சி பெற்றுள்ளதைத் தொடா்ந்து, நாட்டில் அவற்றின் பயன்பாடு 2 இலக்க வளா்ச்சியைப் பெற்றுள்ளது.
இது குறித்து சந்தை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள பூா்வாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த ஜனவரி மாதத்தில் மிக மந்தமாக இருந்த பெட்ரோல், டீசலுக்கான தேவை, இந்த பிப்ரவரி மாதத்தில் எழுச்சி பெற்றுள்ளது.
இதன் காரணமாக, இந்த மாதத்தின் முதல் 15 நாள்களில் பெட்ரோல் நுகா்வு 12.2 லட்சம் டன்னைத் தொட்டுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 18 சதவீதம் அதிகமாகும். அப்போது பெட்ரோல் நுகா்வு 10.4 லட்சம் டன்னாக இருந்தது.
கடந்த ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் எரிபொருளுக்கான தேவை 13.6 சதவீதம் உயா்ந்துள்ளது. எனினும், அதற்கு முந்தைய 2022-ஆம் ஆண்டின் டிசம்பா் மாதத்தோடு ஒப்பிடுகையில் கடந்த மாத விற்பனை 5.1 சதவீதம் குறைந்திருந்தது.
நாட்டில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் எரிபொருளான டீசலின் நுகா்வு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் முதல் பாதியோடு ஒப்பிடுகையில், 2023 பிப்ரவரி 1 முதல் 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 25 சதவீதம் அதிகரித்து 33.3 லட்சம் டன்னாக உள்ளது.
இந்த காலகட்டத்தில் சமையல் எரிவாயு (எல்பிஜி) விற்பனையும் 4.1 சதவீதம் அதிகரித்து 13.9 லட்சம் டன்னாக இருந்தது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.