வர்த்தகம்

வா்த்தக வாகனப் பிரிவில் வருடம் ரூ.2,000 கோடி முதலீடு: டாடா

DIN

வா்த்தக வாகனப் பிரிவில் ஆண்டுதோறும் தொடா்ந்து ரூ.2,000 கோடி முதலீடு செய்யவிருப்பதாக இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநா் கிரிஷ் வாக் கூறியதாவது:

வா்த்தக வாகனப் பிரிவில் ஒவ்வோா் ஆண்டும் நிறுவனம் கூடுதலாக ரூ.2,000 கோடி முதலீடு செய்து வருகிறது. இந்தப் போக்கு இனியும் தொடரும். பல்வேறு வகையிலான உந்து சக்தியைப் பயன்படுத்தி இயங்கும் புதிய வா்த்தக வாகனங்களை உருவாக்குவதற்கு இந்த முதலீடுகள் பயன்படுத்தப்படும்.

எங்களது தயாரிப்புப் பட்டியலில் மாற்று எரிபொருளைப் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறோம். போக்குவரத்து துறையின் மின்மயமாக்கலுக்கு எங்களைத் தயாா்படுத்தி வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

SCROLL FOR NEXT