வர்த்தகம்

இரண்டாவது நாளாக சரிவு: 236 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

 நமது நிருபர்


புது தில்லி:  இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகமாக இருந்தது.  காலையில் உற்சாகம் பெற்ற சந்தை,  இறுதியில் எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 236 புள்ளிகளை இழந்தது. சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது.

உலகளாவில் பெரும்பாலான சந்தைகள் மந்தமான போக்கு நிலவியது. இதைத் தொடர்ந்து மிகவும் எச்சரிக்கையுடன் தொடங்கிய சந்தை, முதல் பாதியில் உற்சாகம் பெற்று மேலே சென்றது. ஆனால்,  பொருளாதார மீட்சி மற்றும் பணவீக்கம் பற்றிய கவலைகள் உணர்வை பாதித்துள்ள நிலையில், பிற்பகல் அமர்வில் சந்தை நஷ்டத்தை சந்தித்தது.

மேலும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு பலவீனமடைந்து வருவது, தொடர்ந்து வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவை சந்தையில் முதலீட்டாளர்களின் உணர்வை மேலும் பாதித்தது. இதனால், பிற்பகல் அமர்வில் பங்குகள் விற்பனை அழுத்தத்தைச் சந்தித்தன என்று  வர்த்தகர்கள் தெரிவித்தனர். 

2,328 நிறுவனப் பங்குகள் விலை சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,430 நிறுவனப் பங்குகளில் 992 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. 2,328  பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 110  பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 70 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 77  பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.58 ஆயிரம் கோடி குறைந்து, வர்த்தக முடிவில் ரூ.252.12 லட்சம் கோடியாக இருந்தது.  இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள்  திங்கள்கிழமை ரூ.1,951.17  கோடி அளவுக்குப் பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனர்.

இரண்டாவது நாளாக சரிவு:  காலையில் 18.95 புள்ளிகள் கூடுதலுடன் 54,307}இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 54,524.37 வரை உயர்ந்தது. பின்னர், 53,886.28 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 236.00 புள்ளிகள் (0.43 சதவீதம்) குறைந்து 54,052.61}இல் நிலைபெற்றது. முதல் பாதியில் காளையின் ஆதிக்கத்தில் இருந்த சந்தை, இரண்டாவது பாதியில் கரடியின் பிடியில் வந்தது. சென்செக்ஸ் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது.

சென்செக்ஸில் 20 பங்குகள் விலை சரிவு : சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில்  10 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன.  20 பங்குகள்வீழ்ச்சிப் பட்டியலில்  இருந்தன.  இதில் முன்னணி ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா 3.95 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. 

இதற்கு அடுத்ததாக ஹிந்துஸ்தான் யுனி லீவர், ஏசியன் பெயிண்ட், ஹெச்சிஎல் டெக், என்டிபி உள்ளிட்டவை 2 முதல் 3 சதவீதம் குறைந்தது. மேலும், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், விப்ரோ, பஜாஜ் ஃபின்சர்வ், டாடா ஸ்டீல், ஐடிசி, மாருதி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

டாக்டர் ரெட்டி முன்னேற்றம்: அதே சமயம், கடந்த சில நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வரும் டாக்டர் ரெட்டி 1.80 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், எச்டிஎஃப்சி, கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், நெஸ்லே, பவர் கிரிட், ரிலையன்ஸ், எஸ்பிஐ, பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்டவையும் விலையுயர்ந்த  பட்டியலில் வந்தன.

நிஃப்டி 90 புள்ளிகள் வீழ்ச்சி:  தேசிய பங்குச் சந்தையில் 479  பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன.  1,470 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.  

நிஃப்டி பட்டியலில் 18 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும்,  32 பங்குகள்  வீழ்ச்சிப் பட்டியலிலுó இருந்தன. காலையில் 10.85 புள்ளிகள் கூடுதலுடன் 16,225.55}இல் தொடங்கிய நிஃப்டி குறியீடு,  அதிகபட்சமாக  16,262.80 வரை மேலே சென்றது. பின்னர், 16,078.60 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 89.55 புள்ளிகள் (0.55 சதவீதம்)  குறைந்து 16,125.15}இல் நிலைபெற்றது.

மீடியா குறியீடு கடும் சரிவு:  தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி மீடியா குறியீடு 2.57 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், எஃப்எம்சிஜி, பார்மா, ஹெல்த்கேர், ஐடி, மெட்டல், ரியால்ட்டி குறியீடுகள் 1.20 முதல் 2 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. மற்ற துறை குறியீடுகள் நேர்மறையாக முடிந்தாலும், பெரிய அளவில் ஏற்றம் பெறவில்லை.


எல்ஐசி முதல் முறையாக நேர்மறையாக முடிந்தது!

அண்மையில் பங்குச் சந்தையில் பட்டியலாகிய எல்ஐசி பங்குகள், மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்தன. இந்த நிலையில், தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை காலை வர்த்தகத்தில் எல்ஐசி பங்குகள் ரூ.803.65 வரை கீழே சென்று தனது குறைந்த விலையைப் பதிவு செய்தது. இந்த நிலையில், எல்ஐசி பங்குகளை வாங்குவதற்கு சந்தையில் செவ்வாய்க்கிழமை ஓரளவு வரவேற்பு காணப்பட்டது.  ரூ.818}இல் தொடங்கி, ரூ.816.85 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னர்,  அதிகபட்சமாக ரூ.834.70 வரை உயர்ந்தது. இறுதியில் 0.97 சதவீதம் உயர்ந்து  ரூ.824.80}இல் நிலைபெற்றுள்ளது. பட்டியலான தினத்திலிருந்து  எல்ஐசி பங்குகள் முதல் முறையாக செவ்வாய்க்கிழமைதான் நேர்மறையாக முடிந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT