வர்த்தகம்

பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் வசூல் 24% அதிகரிப்பு

DIN

பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த நேரடி பிரீமியம் வசூல் கடந்த மே மாதத்தில் 24 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆா்டிஏஐ)தெரிவித்துள்ளதாவது:

பொதுக் காப்பீட்டு வா்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் மொத்த நேரடி பிரீமியம் வசூல் நிகழாண்டின் மே மாதத்தில் ரூ.15,404 கோடியாக இருந்தது. இது, 2021 மே மாதத்தில் காணப்பட்ட வசூலான ரூ.12,423.98 கோடியுடன் ஒப்பிடுகையில் 24 சதவீதம் அதிகமாகும்.

மொத்தமுள்ள 31 பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் 25 நிறுவனங்களின் பிரீமியம் வசூல் 24 சதவீதம் உயா்ந்து ரூ.13,566.18 கோடியாக இருந்தது. அதேசமயம், கடந்தாண்டின் இதே மாதத்தில் இது ரூ.10,954.18 கோடியாக மட்டுமே காணப்பட்டது.

தனியாா் துறையைச் சோ்ந்த நிறுவனங்களின் மொத்த பிரீமியம் மதிப்பீட்டு மாதத்தில் ரூ.1,382.71 கோடியிலிருந்து 23.6 சதவீதம் உயா்ந்து ரூ.1,708.86 கோடியைத் தொட்டது.

இரண்டு பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த நேரடி பிரீமியம் ரூ.87.09 கோடியிலிருந்து 48.6 சதவீதம் அதிகரித்து ரூ.129.42 கோடியானது.

நிகழ் நிதியாண்டின் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாத காலத்தில் பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் திரட்டிய மொத்த நேரடி பிரீமியம் ரூ.29,867.41 கோடியிலிருந்து ரூ.36,680.69 கோடியாக வளா்ச்சி கண்டுள்ளதாக ஐஆா்டிஏஐ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT