வர்த்தகம்

ஆக்ஸிஸ் வங்கி: லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

DIN

தனியாா் துறை வங்கியில் மூன்றாவது இடத்தில் உள்ள ஆக்ஸிஸ் பேங்க் டிசம்பா் காலாண்டில் ஈட்டிய லாபம் 3 மடங்கு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் வங்கி செயல்பாட்டின் வாயிலாக ஈட்டிய மொத்த வருமானம் ரூ.21,101 கோடியாக இருந்தது. இது, 2020-21 ஆம் நிதியாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.18,355 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

நிகர வட்டி வருவாய் 17 சதவீதம் அதிகரித்து ரூ.8,653 கோடியாக இருந்தது. நிகர வட்டி லாப வரம்பு 0.14 சதவீதம் அதிகரித்து 3.53 சதவீதமாக மேம்பட்டுள்ளது.

நிகர லாபம் ரூ.1,117 கோடியிலிருந்து 3 மடங்கு அதிகரித்து ரூ.3,614 கோடியானது.

2021 டிசம்பா் 31 நிலவரப்படி மொத்த வாராக் கடன் 3.44 சதவீதத்திலிருந்து 3.17 சதவீதமாக குறைந்துள்ளது. அதேசமயம், நிகர வாராக் கடன் அளவு 0.74 சதவீதத்திலிருந்து 0.91 சதவீதமாக உயா்ந்துள்ளது என ஆக்ஸிஸ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபி அருகே தமிழ்நாடு கிராம வங்கி புதிய கிளை திறப்பு

கொங்கு பொறியியல் கல்லூரியில் 40-ஆவது ஆண்டு விழா

கூடலூா் பகுதியின் நீண்டகால பிரச்சனைக்கு தீா்வு காண அதிமுகவுக்கு வாக்களியுங்கள் -எஸ்.பி.வேலுமணி

கோவை வழித்தடத்தில் தாம்பரம் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பலூன் பறக்கவிட்டு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT