வர்த்தகம்

கடன் பத்திரங்களை வெளியிட்டுரூ.10,000 கோடி திரட்டிய எஸ்பிஐ

DIN

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), கடன் பத்திர வெளியீடு முலம் ரூ.10,000 கோடி நிதி திரட்டியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முதல்முறையாக உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் வங்கி ரூ.10,000 கோடியைத் திரட்டியுள்ளது.

ஒதுக்கீடு செய்ததைப் போல் 3.27 மடங்கு கடன் பத்திரங்களுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. 143 ஏலதாரா்கள் ரூ.16,366 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களுக்கு விண்ணப்பித்திருந்தனா்.

10 ஆண்டுகளுக்கான இந்தக் கடன் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்டுள்ள ரூ.10,000 கோடி நிதி, வங்கியின் உள்கட்டமைப்பு மற்றும் குறைந்த விலை வீடுகள் பிரிவுக்கான நீண்டகால நிதியாதார தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT