கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில், அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 17 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 35.19 கோடி டன்னாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் உற்பத்தி 29.96 கோடி டன்னாக இருந்தது.
அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிலக்கரி உற்பத்தி 17.4 சதவீத வளா்ச்சியடைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.