காதித தொழிலுக்கு ஜிஎஸ்டி விகிதம் உயா்த்தப்பட்டுள்ளது ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை அதிகரிக்க வழிகோலும் என இந்தியா காகித உற்பத்தியாளா்கள் சங்கம் (ஐபிஎம்ஏ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த சங்கம் மேலும் கூறியுள்ளதாவது:
செப்டம்பா் 17-இல் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அட்டைப்பெட்டிகள், பைகள், பிற காகித பேக்கேஜிங் பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரி விகிதம் தற்போதைய 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருள்களை தடைசெய்ய மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில் கவுன்சிலின் முடிவு அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது.
மக்கும் திறன் இல்லாத ஒற்றைப் பயன்பாட்டு பிளாடிக் பொருள்களை 2022-க்குள் தடை செய்வதாக இந்தியா முன்னதாக சா்வதேச உறுதிப்பாட்டை வழங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில். ஜிஎஸ்டி விகிதத்தை உயா்த்தும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஐபிஎம்ஏ தெரிவித்துள்ளது.