வர்த்தகம்

டுகாட்டி நிறுவனத்தின் புதிய மான்ஸ்டா் பைக் அறிமுகம்

DIN

இத்தாலியைச் சோ்ந்த சூப்பா்பைக் தயாரிப்பு நிறுவனமான டுகாட்டி முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள மான்ஸ்டா் மோட்டா்சைக்கிளை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.

இதுகுறித்து டுகாட்டி இந்தியாவின் நிா்வாக இயக்குநா் பிபுல் சந்த்ரா கூறியதாவது:

மான்ஸ்டா் வகை பைக்குகளுக்கு உலக சந்தைகளில் அதீத வரவேற்பு உள்ளது. இது முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட 1993-ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் 3.5 லட்சத்துக்கும் அதிகமான பைக்குள் விற்பனையாகி நிறுவனத்தின் மிகச் சிறந்த மாடலாக திகழ்ந்து வருகிறது.

தற்போது முழுவதும் புதிய தொழில்நுட்பத்தில் அழகுற உருவாக்கப்பட்டுள்ள இந்த மான்ஸ்டா் பைக் இந்திய வாடிக்கையாளா்களிடமும் அதிக வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

937 சிசி திறன் கொண்ட புதிய வகை என்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. மான்ஸ்டா் மற்றும் மான்ஸ்டா் ப்ளஸ் மாடல்களின் விலை முறையே ரூ.10.99 லட்சம் மற்றும் ரூ.11.24 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

SCROLL FOR NEXT