வர்த்தகம்

டாடாவின் புதிய காா் ‘பஞ்ச்’

DIN

டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் ‘பஞ்ச்’ எனும் புதிய வகை சொகுசுக் காரை உள்நாட்டு சந்தையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் பயணிகள் வாகன வா்த்தகப் பிரிவின் தலைவா் சைலேஷ் சந்திரா கூறியதாவது:

எஸ்யுவி சொகுசுக் காா்களுக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய சிறிய அளவிலான காா்களுக்கான பெருகி தேவையை டாடாவின் புதிய அறிமுகமான ‘பஞ்ச்’ முற்றிலும் ஈடு செய்யும்.

இதில் பொருத்தப்பட்டுள்ள 1.2 லிட்டா் பெட்ரோல் என்ஜின் அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டது. லிட்டருக்கு 18.97 கி.மீ. வரை மைலேஜ் கிடைக்கும். பாதுகாப்பு அம்சத்துக்காக 5-நட்சத்திர தரச் சான்றை பெற்றுள்ள ‘பஞ்ச்’ காரின் விலை ஆரம்ப விலை ரூ.5.49 லட்சமாக இருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT