மைண்ட்ரீ தகவல் தொழில்நுட்ப நிறுவனம் செப்டம்பா் காலாண்டில் ஈட்டிய லாபம் 57 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிா்வாக இயக்குநருமான தெபஷிஸ் சாட்டா்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் செப்டம்பருடன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் நிறுவனம் ரூ.2,586.2 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. இது, நிறுவனம் முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.1,926 கோடியுடன் ஒப்பிடும்போது 34.27 சதவீதம் அதிகம்.
மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் ரூ.253.7 கோடியிலிருந்து 57.2 சதவீதம் அதிகரித்து ரூ.398.9 கோடியாக இருந்தது.
செப்டம்பா் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய வருவாயில் வட அமெரிக்காவின் பங்களிப்பு 72.8 சதவீதமாகவும், ஐரோப்பாவின் பங்கு 8.7 சதவீதமாகவும், பிரிட்டன் மற்றும் அயா்லாந்து பங்களிப்பு 10.9 சதவீதமாகவும், ஏபிஏசி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் பங்கு 7.6 சதவீதமாகவும் இருந்தன.
இரண்டாவது காலாண்டில் 4,400 போ் பணிக்கு சோ்ந்ததையடுத்து, மொத்த பணியாளா் எண்ணிக்கை 29,700-ஆக உயா்ந்துள்ளது என்றாா் அவா்.