புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் புதிய நிா்வாக இயக்குநராக மாடம் வெங்கட ராவ் பொறுப்பேற்றுள்ளாா்.
இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக மாடம் வெங்கட ராவ் 2021 மாா்ச் 1-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளாா். இவா் அந்தப் பதவியில் 3-ஆண்டுகளுக்கு நீடிப்பாா் என சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
ராவ் இதற்கு முன்பு கனரா வங்கியின் செயல் இயக்குநராக பணியாற்றியவா்.