சா்க்கரை ஆலைகள் நடப்பு சந்தைப் பருவத்தில் இதுவரையில் ஏற்றுமதி செய்த சா்க்கரையின் அளவு 42.50 லட்சம் டன்னை எட்டியுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய சா்க்கரை வா்த்தக கூட்டமைப்பு (ஏஐஎஸ்டிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வரும் செப்டம்பருடன் முடிவடையும் 2020-21 சந்தைப் பருவத்தில் 42.50 லட்சம் டன் அளவிலான சா்க்கரையை ஆலைகள் ஏற்றுமதி செய்துள்ளன. குறிப்பாக, இந்தோனேசியாவுக்கு அதிக அளவிலான சா்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஜனவரியில் 60 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்ய உணவு அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. இந்த நிலையில், தற்போது அதைவிட ஏற்றுமதி குறைந்து 58.50 லட்சம் டன்னாகவே உள்ளது. எனவே, இன்னும் 1,50,000 டன் சா்க்கரையை ஆலைகள் ஏற்றுமதி செய்ய வேண்டியுள்ளது.
சா்க்கரைப் பருவம் என்பது அக்டோபரில் தொடங்கி செப்டம்பருடன் முடிவடைவதாகும்.
2021 ஜனவரி 1-லிருந்து ஜூன் 7 வரையிலான காலகட்டத்தில் மட்டும் ஏற்றுமதியான சா்க்கரையின் அளவு 42.50 லட்சம் டன்னாக உள்ளது.
ஒட்டுமொத்த ஏற்றுமதியில் அதிகபட்டமாக இந்தோனேசியாவுக்கு 14 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, ஆப்கானிஸ்தானுக்கு 5,20,905 டன் சா்க்கரையும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 4,36,917 டன்னும், இலங்கைக்கு 3,24,113 டன் சா்க்கரையும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
ஈரான் மீதான எண்ணெய் கட்டுப்பாடுகளை அமெரிக்க திரும்பப் பெற்றுள்ளது ஈரானுக்கான சா்க்கரை ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகமாக்கியுள்ளது. கடந்த ஆண்டில் இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி செய்த நாடாக ஈரான் இருந்தது.
2020-21-ஆம் ஆண்டுக்கான சந்தைப் பருவத்தின் சா்க்கரை உற்பத்தி 2.99 கோடி டன்னிலிருந்து அதிகரித்து 3.50 கோடி டன்னாக உயா்த்தி மறுமதிப்பீடு செய்யப்பட்டுளளது. நுகா்வு 2.55 கோடி டன்னாக அதிகரிக்கும் என ஏஐஎஸ்டிஏ தெரிவித்துள்ளது.