வர்த்தகம்

பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடக்கம்

DIN

பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று காலை உயர்வுடன் தொடங்கியது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 159.90 புள்ளிகள் உயர்ந்து 49,558.19 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.36 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 63.70 புள்ளிகள் உயர்ந்து 14,583.85 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.43 சதவிகிதம் உயர்வாகும்.

கடந்த சில நாள்களாக சரிவுடன் முடிந்த வர்த்தகம் நேற்று (ஜன.19) உயர்வுடன் முடிந்த நிலையில், இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது.

டெக் மஹிந்திரா, ஹெச்.சி.எல்., இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன.

டெக் மஹிந்திரா 2.27 சதவிகிதமும், ஹெச்.சி.எல் 2.25 சதவிகிதமும், இன்போசிஸ் 2.12 சதவிகிதமும் உயர்ந்துள்ளன.

என்.டி.பி.சி., ஐ.டி.சி., எச்.டி.எஃப்.சி., ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னார் வளைகுடாவில் வெளிரிப்போன பவளப்பாறைகள்: அடுத்து என்னாகுமோ?

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT