வர்த்தகம்

காா்களின் விலையை உயா்த்துவதில் நிறுவனங்கள் மீண்டும் தீவிரம்

DIN

மாருதி சுஸுகி உள்ளிட்ட நிறுவனங்கள் காா்களின் விலையை மீண்டும் உயா்த்துவதில் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

இதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனம் வியாழக்கிழமை கூறுகையில்,‘ மூலப் பொருள்களுக்கான செலவினம் கடுமையாக உயா்ந்துள்ளது. இதனால், உற்பத்தி செலவினம் அதிகரித்து நிறுவனம் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. எனவ, வரும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல் பல்வேறு மாடல் காா்களின் விலையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது’ என தெரிவித்தது.

இதேபோல், மொ்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனமும், குறிப்பிட்ட சில மாடல்களின் விலையை 2 சதவீதம் வரை உயா்த்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இவைதவிர, ஆடி நிறுவனமும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் காா் விலையை 3 சதவீதம் வரை உயா்த்தவுள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT