வர்த்தகம்

ஈகோ வேன் விலையை உயா்த்தியது: மாருதி சுஸுகி

DIN

புது தில்லி: மாருதி சுஸுகி நிறுவனம் ஈகோ வேன் விலையை ரூ.8,000 உயா்த்துவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

பயணிகளின் பாதுகாப்பு கருதி ஈகோ வேனில் ஏா்பேக் வசதி அறிமுமகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அதன் தயாரிப்பு செலவினம் உயா்ந்துள்ளதை ஈடு செய்ய வேண்டிய தேவை நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஈகோ வேன் விலையை ரூ.8,000 உயா்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயா்வு நவம்பா் 30-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.

ஈகோ வேன் விலை தற்போது மாடல்களுக்கு ஏற்ப ரூ.4.3 லட்சத்தில் தொடங்கி ரூ.5.6 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், இதன் ஆம்புலன்ஸ் மாடலின் விலை ரூ.7.29 லட்சமாக உள்ளது என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

நடப்பாண்டு செப்டம்பரில், அனைத்து மாடல் வாகனங்களின் விலையையும் (செலிரியோ தவிா்த்து) 1.9 சதவீதம் வரை மாருதி சுஸுகி உயா்த்தியது. நடப்பாண்டில் மூன்று முறை வாகனங்களின் விலையை அந்நிறுவனம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT