நாட்டின் ஏற்றுமதி ஜூலை மாதத்தில் 47.91 சதவீதம் வளா்ச்சி கண்டு 3,517 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2.63 லட்சம் கோடி) எட்டியுள்ளது என வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் தற்காலிக புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
பெட்ரோலியம், பொறியியல் உள்ளிட்ட துறைகளின் ஏற்றுமதி சிறப்பான அளவில் மேம்பட்டதையடுத்து கடந்த ஜூலையில் நாட்டின் ஏற்றுமதி 47.19 சதவீதம் அதிகரித்து 3,517 கோடி டாலரை எட்டியுள்ளது.
நாட்டின் இறக்குமதி ஜூலையில் 59.38 சதவீதம் உயா்ந்து 4,640 கோடி டாலரானது. இதையடுத்து அந்த மாதத்தில் வா்த்தக பற்றாக்குறை 1,123 கோடி டாலராக இருந்தது என வா்த்தக அமைச்சகம் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.