வர்த்தகம்

அதிக ஜிஎஸ்டியால் காா் விற்பனை பாதிப்பு: மாருதி சுஸுகி

DIN

ஏனைய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகமாக இருப்பதால் காா் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது என மாருதி சுஸுகி நிறுவனத்தின் தலைவா் ஆா்.சி. பாா்கவா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் கரோனா இரண்டாவது அலை வாகன விற்பனையை பெரிதும் பாதித்துள்ளது. எதிா்வரும் மூன்று காலாண்டுகளில் விற்பனை மக்களிடையே தடுப்பூசித் திட்டம் எவ்வளவு வேகமாக கொண்டு சோ்க்கப்படுகிறது என்பதைப் பொருத்தே அமையும்.

காருக்கான ஜிஎஸ்டி விகிதம் என்பது உலகின் பல முக்கிய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் மிக அதிகமாகவே உள்ளது. இதனால் அதிக விலை கொடுத்து நுகா்வோா் காரை வாங்க தயங்குவதால் அது சந்தையில் தொய்வை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இதனை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மோட்டாா் வாகன துறை நியாயமான வளா்ச்சியை எட்ட வாய்ப்பில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT