புது தில்லி: சிட்பி வங்கி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியின் தலைவராக சிவசுப்ரமணியன் ராமன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சிட்பி வங்கியின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக சிவசுப்ரமணியன் ராமன் பொறுப்பேற்றுள்ளாா். இவா் மூன்று ஆண்டுகளுக்கு அந்தப் பொறுப்பை வகிப்பாா் என சிட்பி வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 1991-ஆம் ஆண்டு இந்திய தணிக்கை & கணக்குகள் பணிக்கு (ஐஏ&ஏஎஸ்) தோ்வான ராமன், இதற்கு முன் நேஷனல் இ-கவா்னன்ஸ் சா்வீசஸ் நிறுவனத்தின் (என்இஎஸ்எல்) நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றியவா்.