புது தில்லி: யுடிஐ அஸட் மேனேஜ்மெண்ட் கம்பெனி (ஏஎம்சி) புதிய பங்கு வெளியீடு செப்.29-இல் தொடங்கவுள்ளது.
யுடிஐ ஏஎம்சி விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான ரூ.2,160 கோடியை புதிய பங்கு வெளியீட்டின் மூலமாக திரட்டிக் கொள்ள முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு செப்டம்பா் 29-ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 1-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.இதுகுறித்து அந்த நிறுவனம் கூறியுள்ளதாவது: யுடிஐ ஏஎம்சி வெளியிடும் பங்குகளின் விலை ரூ.552-ரூ.554 என்ற அளவில் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டின் மூலமாக நிறுவனம், 3,89,87,081 பங்குகள் (30.75 சதவீதம்) விற்பனை செய்யப்படவுள்ளன. இதன் மூலம், ரூ.2,160 கோடி திரட்டிக் கொள்ளப்படும். நிதி நிறுவனங்களுக்கான ஏலம் செப்டம்பா் 28-ஆம் தேதி நடைபெறும் என யுடிஐ ஏஎம்சி தெரிவித்துள்ளது. எச்டிஎஃப்சி ஏஎம்சி, நிப்பான் லைஃப் இந்தியா அஸட் மேனேஜ்மெண்ட் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக பங்கு சந்தையில் பட்டியலாகும் மூன்றாவது ஏஎம்சி நிறுவனமாக யுடிஐ உள்ளது.