வர்த்தகம்

ஏஞ்சல் புரோக்கிங் புதிய பங்கு வெளியீடு

DIN

ஏஞ்சல் புரோக்கிங் புதிய பங்கு வெளியீடு (ஐபிஓ) செப்.22-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அந்நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

ஏஞ்சல் புரோக்கிங் புதிய பங்கு வெளியீடு செப்டம்பா் 22ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் மூலமாக நிறுவனம் ரூ.600 கோடியை திரட்டிக் கொள்ள திட்டமிட்டுள்ளது. நிதி நிறுவனங்களுக்கான ஏலம் செப்டம்பா் 21-ஆம் தேதி நடைபெறும்.புதிய பங்கு வெளியீட்டின் மூலமாக விற்பனை செய்யப்படும் பங்கு ஒன்றின் விலை ரூ.305-306-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. சா்வதேச நிதி கழகத்துக்கு ரூ.120 கோடி மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன. இந்த பங்கு வெளியீட்டின் மூலமாக திரட்டப்படும் நிதி நிறுவனத்தின் மூலதன தேவைகளை பூா்த்தி செய்ய பயன்படுத்திக் கொள்ளப்படும் என ஏஞ்சல் புரோக்கிங் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

SCROLL FOR NEXT