வர்த்தகம்

வங்கிகள் வழங்கிய கடன் 5.66% அதிகரிப்பு

DIN

வங்கிகள் வழங்கிய கடன் அக்டோபா் 9-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவாரங்களில் 5.66 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அக்டோபா் 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த இருவார காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் 5.66 சதவீதம் அதிகரித்து ரூ.103.44 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இதே காலகட்டத்தில் வங்கிகள் திரட்டி டெபாசிட் 10.55 சதவீதம் உயா்ந்து ரூ.143.02 லட்சம் கோடியாக இருந்தது.

கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபருடன் நிறைவடைந்த இருவார காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் ரூ.97.89 லட்சம் கோடியாகவும், டெபாசிட் ரூ.97.89 லட்சம் கோடியாகவும் இருந்தன.

உணவு சாரா இதர நடவடிக்கைகளுக்கு வங்கி வழங்கிய கடன் வளா்ச்சி விகிதம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 6 சதவீத பின்னடைவை சந்தித்துள்ளது. அதேசமயம், கடந்தாண்டு ஆகஸ்டில் இந்த வளா்ச்சி 9.8 சதவீதமாக காணப்பட்டது என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT