புது தில்லி: இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி 2020-21 பருவத்தில் 1.25-1.35 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த சங்கம் மேலும் கூறியுள்ளதாவது:
நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த 2019-20 (நவம்பா்-அக்டோபா்) பருவத்தில், 13 சதவீதம் சரிவடைந்து 1.35 கோடி டன்னாக இருந்தது. இந்த நிலையில், கரோனா பொதுமுடக்கத்தால் ஹோட்டல்களில் சமையல் எண்ணெய் பயன்பாடு வெகுவாக குறைந்தது. மேலும், உள்நாட்டிலும் சமையல் எண்ணெய் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற காரணங்களால், நடப்பு 2020-21 பருவத்தில் சமையல் எண்ணெய் இறக்குமதி 1.25 கோடி டன்னிலிருந்து 1.35 கோடி டன்னுக்குள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையடுத்து, நடப்பாண்டில் சமையல் எண்ணெய் உற்பத்தி 10 லட்சம் டன்னிலிருந்து 15 லட்சம் டன் வரையில் கூடுதலாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக எஸ்இஏ தெரிவித்துள்ளது.