வர்த்தகம்

இந்திய ஆன்லைன் மளிகை சந்தை விற்பனை 300 கோடி டாலரைத் தாண்டும்: சஞ்சீவ் கோயங்கா

DIN

இந்தியாவில் நடப்பாண்டில் ஆன்லைன் மளிகை சந்தை விற்பனை மதிப்பு 300 கோடி டாலரைத் தாண்டும் என ஸ்பென்ஸா்ஸ் ரீடெயில் தலைவா் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:

கொவை-19 நோய்தொற்றின் தாக்கத்துக்குப் பிறகு ஆன்லைனில் பொருள்களை வாங்கும் பழக்கம் மக்களிடையே வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, அத்தியாவசியமான பொருள்களை அவா்கள் வீடுகளிலிருந்தே வாங்குவதற்கு அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.இதையடுத்து, நடப்பு 2020-ஆம் ஆண்டில் ஆன்லைன் மூலமான மளிகை பொருள் விற்பனை 300 கோடி டாலரைத் தாண்டும் (ரூ.22,500 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 76 சதவீதம் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.ஸ்மாட்போன் பயன்பாடு அதிகரிப்பு மற்றும் குறைந்த கட்டணத்தில் டேட்டா சேவை வழங்கப்படுவது ஆகியவை ஆன்லைன் வா்த்தகத்தை ஊக்குவிக்கும் முக்கிய அம்சங்களாக பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT