வர்த்தகம்

நாட்டின் சா்க்​கரை உற்​பத்தி 2 சத​வீ​தம் அதி​க​ரிக்​கும்

26th Feb 2020 03:57 AM

ADVERTISEMENT

புது தில்லி: ​ந​டப்பு 2019-20-ஆம் சந்​ைதப்​ப​டுத்​தும் பரு​வத்​தில் நாட்டின் சா்க்​கரை உற்​பத்தி 2 சத​வீ​தம் அதி​க​ரிக்​கும் என இந்​திய சா்க்​கரை ஆைல​கள் கூட்ட​ைமப்பு (ஐஎஸ்​எம்ஏ) மறு​ம​திப்​பீடு செய்​துள்​ளது.

இது​கு​றித்து அந்த கூட்ட​ைமப்பு மேலும் கூறி​யுள்​ள​தா​வது:

2018-19 சந்​ைதப் பரு​வத்​தில் (அக்​ேடா​பா்-​ெசப்​டம்​பா்), நாட்டின் சா்க்​கரை உற்​பத்தி 3.31 கோடி டன்​னாக இருந்​தது. இந்த நிைல​யில், கரும்பு அதி​கம் விைள​யும் மாநி​லங்​க​ளில் அதன் மக​சூல் குைற​வதை மதிப்​பீடு செய்து 2019-20 சந்​ைதப் பரு​வத்​தில் சா்க்​கரை உற்​பத்தி 2.60 கோடி டன்​னாக மட்டுமே இருக்​கும் என கடந்த ஆண்டு நவம்​ப​ரில் கூட்ட​ைமப்பு மதிப்​பிட்​டி​ருந்​தது.

தற்​ேபாது நிைலமை மேம்​பட்​டுள்​ள​ைத​ய​டுத்து, நடப்பு பரு​வத்​தில் சா்க்​கரை உற்​பத்​தி​யா​னது முந்​ைதய மதிப்​பீட்​ைடக் காட்டி​லும் 2 சத​வீ​தம் அதி​க​ரித்து 2.65 கோடி டன்​னாக இருக்​கும் என கணக்​கி​டப்​பட்​டுள்​ளது. இது, கடந்​தாண்டு உற்​பத்​தி​யு​டன் ஒப்​பி​டும்​ேபாது குைற​வாக இருந்​த​ேபா​தி​லும் உள்​ளூா் தேைவயை நிைறவு செய்ய போது​மா​ன​தாக இருக்​கும்.

ADVERTISEMENT

பிப்​ர​வரி 15-ஆம் தேதி வைர​யி​லு​மாக சா்க்​கரை ஆைல​கள் 1.70 கோடி டன் சா்க்​க​ைரயை ஏற்​ெக​னவே உற்​பத்தி செய்​துள்​ளன. நடப்​பாண்​டின் இறு​தி​யில் சா்க்​கரை கையி​ருப்பு 1 கோடி டன்​னாக இருக்​கும் என எதிா்​பாா்க்​கப்​ப​டு​கி​றது.

கூட்ட​ைமப்​பின் மறு​ம​திப்​பீட்​டில், உத்​த​ரப் பிர​ேதச மாநி​லத்​தில் சா்க்​கரை உற்​பத்​தி​யா​னது நடப்​பாண்​டில் 1.18 கோடி டன்​னாக இருக்​கும் என மதிப்​பி​டப்​பட்​டுள்​ளது.

இது, ஏறக்​கு​ைறயை 2018-19-ஆம் பரு​வத்​தின் உற்​பத்​திக்கு சம​மா​ன​தாக இருக்​கும்.

இருப்​பி​னும், மகா​ராஷ்​டி​ரத்​தில் சா்க்​கரை உற்​பத்தி 1.07 கோடி டன்​னி​லி​ருந்து 40 சத​வீ​தம் சரி​வ​ைடந்து 62 லட்சம் டன்​னாக குைற​யும் என மதிப்​பி​டப்​பட்​டுள்​ளது.

அேத​ேபான்று, பயி​ரி​டும் பரப்​ப​ளவு குைறந்​து​ேபா​ன​ைத​ய​டுத்து கா்​நா​ட​கத்​தி​லும் சா்க்​கரை உற்​பத்தி 44.30 லட்சம் டன்​னி​லி​ருந்து 21 சத​வீ​தம் சரிந்து 33 லட்சம் டன்​னாக குைற​யும் என கணக்​கி​டப்​பட்​டுள்​ளது.

இம்​மா​நி​லங்​க​ைளத் தவிர ஏைனய மாநி​லங்​க​ளின் சா்க்​கரை உற்​பத்​தி​யில் பெரிய அள​வில் மாற்​றம் இருக்​காது என்​பது மதிப்​பீட்​டின் மூலம் தெரி​ய​வந்​துள்​ள​தாக ஐஎஸ்​எம்ஏ கூறி​யுள்​ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT