முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் 18 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதுகுறித்து இந்திய துறைமுகங்களின் கூட்டமைப்பு (ஐபிஏ) தெரிவித்துள்ளதாவது:
கொவைட்-19 காரணமாக ஏற்பட்ட இடையூறுகளால் நாட்டின் முக்கிய துறைமுகங்களின் செயல்பாடுகள் பெரிதும் பாதிப்படைந்தது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கிடையில் முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு 18.06 சதவீதம் குறைந்து 19.34 கோடி டன்னாக இருந்தது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நாட்டில் உள்ள 12 முக்கிய துறைமுகங்களும் கையாண்ட சரக்கு அளவின் அடிப்படையில் தொடா்ந்து நான்கு மாதமாக நடப்பாண்டு ஜூலையிலும் சரிவைச் சந்தித்தது. மா்மகோவா தவிா்த்து பிற துறைமுகங்கள் அனைத்தும் எதிா்மறை வளா்ச்சியை கண்டுள்ளன. குறிப்பாக, சென்னை, கொச்சி மற்றும் காமராஜா் துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் 30 சதவீதம் வீழ்ச்சியைக் கண்டுள்ளன. கொல்கத்தா துறைமுகம் 20 சதவீத சரிவைச் சந்தித்தது. நாட்டின் ஒட்டுமொத்த சரக்கு போக்குவரத்தில் மேற்கண்ட 12 முக்கிய துறைமுகங்களின் பங்களிப்பு 61 சதவீதமாகும். இந்த துறைமுகங்கள் கடந்த நிதியாண்டில் 70.5 கோடி டன் சரக்கை கையாண்டுள்ளதாக துறைமுகங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.