அந்நியச் செலாவணி கையிருப்பு 205 கோடி டாலர் சரிவு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 17-ஆம் தேதியுடன் முடிவடைந்த   வாரத்தில் 205 கோடி டாலர் (ரூ.14,350 கோடி) குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
அந்நியச் செலாவணி கையிருப்பு 205 கோடி டாலர் சரிவு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 17-ஆம் தேதியுடன் முடிவடைந்த   வாரத்தில் 205 கோடி டாலர் (ரூ.14,350 கோடி) குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு சரிவடைந்ததையடுத்து, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மே 17-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 205 கோடி டாலர் குறைந்து 41,799 கோடி டாலராக (ரூ.29.25 லட்சம் கோடி) உள்ளது.  
இதற்கு முந்தைய வாரத்தில் செலாவணி கையிருப்பு 137  கோடி டாலர் உயர்ந்து 42,004 கோடி டாலராக காணப்பட்டது.
மதிப்பீட்டு வார அளவில், ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பாக உள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு  203 கோடி டாலர் சரிந்து  39,019 கோடி டாலராக இருந்தது. தங்கத்தின் கையிருப்பு மாற்றம் எதுவுமின்றி 2,302 கோடி டாலர் என்ற அளவிலேயே காணப்பட்டது.  
சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர்  98 லட்சம் டாலர் சரிந்து 144 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 1.69 கோடி டாலர் வீழ்ச்சியடைந்து 333  கோடி டாலராகவும் இருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com