பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,014.75 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில் வார்த்தகம் தொடக்கத்திலேயே 1,014.75 புள்ளிகள் கிடுவென உயரத் தொடங்கி, அதிகபட்சமாக 40,124.96 புள்ளிகளைத் தொட்டது.
அதேபோல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 303.25 புள்ளிகள் உயர்ந்து 12,041.15 புள்ளிகள் வரை சென்றது.