சுந்தரம் பிஎன்பி பரிபா லாபம் 64% உயர்வு

சுந்தரம் பைனான்ஸின் துணை நிறுவனமான சுந்தரம் பிஎன்பி பரிபாவின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 64.1 சதவீதம் அதிகரித்துள்ளது.


சுந்தரம் பைனான்ஸின் துணை நிறுவனமான சுந்தரம் பிஎன்பி பரிபாவின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 64.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீநிவாஸ் ஆச்சார்யா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:
கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனம் ரூ.25.74 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 2017-18 நிதியாண்டில் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.15.68 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 64.1 சதவீதம் அதிகமாகும்.
2018-19 முழு நிதியாண்டில் நிகர லாபம் ரூ.144 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.145 கோடியாக இருந்தது. மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி மொத்த வாராக் கடன் விகிதம் 2.95 சதவீதம் என்ற அளவில்  இருந்தது.
நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டில் கடன் சந்தையிலிருந்து பல்வேறு வழிமுறைகளில் ரூ.4,000 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளோம். கடன் வழங்கல் நடவடிக்கையில் நடப்பாண்டில் 10 சதவீத வளர்ச்சியை எட்டுவதே நிறுவனத்தின் இலக்கு என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com