ஐஓபி ரூ.850 கோடி திரட்ட திட்டம்

பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி), நடப்பு நிதியாண்டில் ரூ.850 கோடியை திரட்டவுள்ளதாக தெரிவித்துள்ளது
ஐஓபி ரூ.850 கோடி திரட்ட திட்டம்


பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி), நடப்பு நிதியாண்டில் ரூ.850 கோடியை திரட்டவுள்ளதாக தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது: மூலதன இருப்பை மேம்படுத்திக் கொள்ள ஏதுவான அனைத்து வழிமுறைகள் குறித்தும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சொத்துகள் மற்றும் முதலீடுகளை விற்பனை செய்து நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 
நடப்பு 2019-20  நிதியாண்டில் இந்த வழிமுறை மூலம் ரூ.850 கோடி வரை திரட்ட ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கூட்டு திட்டங்கள் மூலம் வளங்களை பெருக்குவதற்காக வங்கி தனது பங்குகளை விற்பனை செய்யும் வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக, வங்கிக்கு ரூ.445 கோடி வரை கிடைக்கும் என்று மும்பை பங்குச் சந்தையிடம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2018-19 நிதியாண்டில் அதற்கு சொந்தமான ஆறு சொத்துகளை (வெளிநாடுகளில் இருந்த 5 சொத்துகள் உள்பட)  விற்று ரூ.129 கோடி திரட்டியது. 
மேலும், 26 சொத்துகளை விற்கும் நடவடிக்கையில் அந்த வங்கி ஏற்கெனவே இறங்கியுள்ளது. இந்த சொத்துகளின் மதிப்பு ரூ.775 கோடியாகும். இது தொடர்பாக, ஐஓபி  பல்வேறு பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com