வரும் ஏப்ரல் முதல் வாகனங்களின் விலை ரூ.25,000 வரை உயரவுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:
வெளிப்புற பொருளாதார காரணிகள் மற்றும் இடுபொருள்கள் செலவினம் அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வாகனங்களின் விலையை வரும் ஏப்ரல் மாதம் முதல் உயர்த்த டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.
அதன்படி, வாகனங்களின் விலை மாடல்களுக்கு ஏற்ப ரூ.25,000 வரை உயர்த்தப்படவுள்ளது என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் ரூ.2.36 லட்சம் விலையுடைய நானோ கார் முதல் ரூ.18.37 லட்சம் விலையுள்ள ஹெக்ஸா சொகுசு கார் வரையிலான விற்பனையில் ஈடுபட்டுள்ளது.
டொயோட்டா மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனங்கள் குறிப்பிட்ட சில மாடல்களுக்கு வரும் ஏப்ரல் முதல் விலையை அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், அந்த வரிசையில் தற்போது டாடா மோட்டார்ஸýம் இடம்பிடித்துள்ளது.